Categories: இந்தியா

சோனியா செய்ததை ராகுல் செய்யமாட்டுகிறார்.. பிரசாந்த் கிஷோர் கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி செய்ததை ராகுல் காந்தி செய்யாமலே பிடிவாதமாக இருக்கிறார் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை தேர்தலுக்காக சில ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை அதற்கு உடன்படவில்லை என்பதால் கிஷோர் விலகிவிட்டார் எனவும் தகவல் வெளியானது.

பிரபல ஊடகமாக பிடிஐ-க்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லுபடியான வெற்றியை ராகுல் காந்தியால் பெற்று தர முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் கட்சியில் இருந்து விலகி இருக்கவோ, வேறொருவர் கட்சியை வழிநடத்தவும் அனுமதிக்காமல் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். என்னை பொறுத்தவரை இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.

எந்த வெற்றியும் பெற்று தர முடியாமல் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது, கட்சியில் இருந்து சற்று விலகி இருப்பது தவறு இல்லை. அதுதான் கட்சிக்கும் நல்லது. அதன்படி, 5 ஆண்டுகள் கட்சியை வழிநடத்த வேறு யாரையாவது அனுமதிக்க வேண்டும். ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி அதைத்தான் செய்தார்.

கடந்த 1991-ல் தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்த சோனியா காந்தி, அப்போது நரசிம்ம ராவை பிரதமராக பொறுப்பேற்க அனுமதித்தார். எனவே, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு மோசமான தோல்வி ஏற்பட்டால், ராகுல் காந்தி கட்சியில் இருந்து ஒதுங்கி அடுத்த 5 ஆண்டுகள் வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தங்களிடம் என்ன குறை இருக்கிறது என அறிந்துகொண்டு செயல்படுவது தான் ஒரு நல்ல தலைவனின் முக்கிய பண்பு. இது ராகுல் காந்திக்கும் தெரியும். உதவி தேவை என்பதை நீங்கள் உணரவில்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செயல்படுத்தக்கூடிய ஒருவர் தான் தனக்குத் தேவை என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அது சாத்தியமில்லை எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

3 minutes ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

11 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

20 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

3 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

3 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

4 hours ago