Prashant Kishore speech about Rahul Gandhi [file image]
Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி செய்ததை ராகுல் காந்தி செய்யாமலே பிடிவாதமாக இருக்கிறார் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை தேர்தலுக்காக சில ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை அதற்கு உடன்படவில்லை என்பதால் கிஷோர் விலகிவிட்டார் எனவும் தகவல் வெளியானது.
பிரபல ஊடகமாக பிடிஐ-க்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு சொல்லுபடியான வெற்றியை ராகுல் காந்தியால் பெற்று தர முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் கட்சியில் இருந்து விலகி இருக்கவோ, வேறொருவர் கட்சியை வழிநடத்தவும் அனுமதிக்காமல் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். என்னை பொறுத்தவரை இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.
எந்த வெற்றியும் பெற்று தர முடியாமல் அதே வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது, கட்சியில் இருந்து சற்று விலகி இருப்பது தவறு இல்லை. அதுதான் கட்சிக்கும் நல்லது. அதன்படி, 5 ஆண்டுகள் கட்சியை வழிநடத்த வேறு யாரையாவது அனுமதிக்க வேண்டும். ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி அதைத்தான் செய்தார்.
கடந்த 1991-ல் தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்த சோனியா காந்தி, அப்போது நரசிம்ம ராவை பிரதமராக பொறுப்பேற்க அனுமதித்தார். எனவே, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு மோசமான தோல்வி ஏற்பட்டால், ராகுல் காந்தி கட்சியில் இருந்து ஒதுங்கி அடுத்த 5 ஆண்டுகள் வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தங்களிடம் என்ன குறை இருக்கிறது என அறிந்துகொண்டு செயல்படுவது தான் ஒரு நல்ல தலைவனின் முக்கிய பண்பு. இது ராகுல் காந்திக்கும் தெரியும். உதவி தேவை என்பதை நீங்கள் உணரவில்லை என்றால் யாரும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செயல்படுத்தக்கூடிய ஒருவர் தான் தனக்குத் தேவை என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அது சாத்தியமில்லை எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…