உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரசாந்த் பூஷன், மீண்டும் போராட்டம் பற்றிய நீதிபதியின் தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுதில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞராக வலம் வருபவர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததாக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார்.அதில் அவருக்கு தண்டனையாக ரூ.1யை அபராதமாக உச்ச நீதிமன்றம் செலுத்த சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பொது இடங்களில் போராட்டம் நடத்துவது குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சாலைகள் போன்ற இடங்களில் கூடி போராட்டம் நடத்த சட்டப்படி அனுமதி கிடையாது. மேஉம் இது போன்ற போராட்டங்கள் நடக்கும்போது, நீதிமன்றங்களின் உத்தரவுக்காக காத்திருக்காமல், போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்தது.
நீதிபதியின் இத்தீர்ப்பினை விமர்சித்துள்ளார் பிரசாந்த் பூஷன்.இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: மும்பை ஐகோர்ட், ரியா சக்ரபார்த்திக்கு ஜாமீன் வழங்கும்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையினரை கண்டித்தது. அதே நாளில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், போலீசாரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கூட போராடும் உரிமையை கட்டுப்படுத்தி உள்ளது. சுதந்திரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து சறுக்கி வருகிறது. அதேசமயம் ஐகோர்ட்டுகள் நீதியின் கொடியை உயர்த்திப் பிடிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…