தேசத்தின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி…!!வாழ்த்துக்கள் கெஜிரி…பாஜகவின் வியூகத்தை உடைத்து எரிந்த பிரசாந்த் கிஷோர் வாழ்த்து

Published by
kavitha

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள மக்களுக்கு நன்றி என்று அக்கட்சிக்காக அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image result for delhi election kejirwal

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில்டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் அக்கட்சிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர், அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் வல்லவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர்.இவரே இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற, டெல்லிக்கு நன்றி என பதிவிட்டு கூறிள்ளார்.

இந்நிலையில் தான் டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்ற பிரசாந்த் கிஷோர் மீண்டும் 3 வது முறையாக முதல்வராக  உள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…

36 minutes ago

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…

1 hour ago

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…

1 hour ago

தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

1 hour ago

மழையோ மழை… இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

1 hour ago

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

4 hours ago