தேசத்தின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லிக்கு நன்றி…!!வாழ்த்துக்கள் கெஜிரி…பாஜகவின் வியூகத்தை உடைத்து எரிந்த பிரசாந்த் கிஷோர் வாழ்த்து

Published by
kavitha

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ள மக்களுக்கு நன்றி என்று அக்கட்சிக்காக அரசியல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image result for delhi election kejirwal

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது.இந்நிலையில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் ஆடிப்பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில்டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் அக்கட்சிக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர், அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் வல்லவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர்.இவரே இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற, டெல்லிக்கு நன்றி என பதிவிட்டு கூறிள்ளார்.

இந்நிலையில் தான் டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்ற பிரசாந்த் கிஷோர் மீண்டும் 3 வது முறையாக முதல்வராக  உள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

7 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago