5 முறை பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் காலமானார்.! 2 நாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.!

Published by
மணிகண்டன்

5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார் .

பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கி தெரிவித்து வருகின்றனர். ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக இவரது மறைவு பார்க்கப்படுகிறது. இவரவு மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்க படுகிறது என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தனது 20 வயதில் அரசியலில் நுழைந்துள்ளார். சிரோன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 10 முறை சட்டமன்றத்திற்கு எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளர். அடுத்து, 1977 மற்றும் 1997 என 2வது மற்றும் 3வது முறையாக முதல்வராக இருந்துள்ளார். அடுத்து, 2007 முதல் 2017 வரையில் தொடர்ந்து 2 முறை என் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார் பிரகாஷ் சிங் பாதல் . இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலில் கூட 95 வயதில் தேர்தல் களம் கண்டார் பிரகாஷ் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago