Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனவைரும் தங்களது வாக்குசாவடிகளில் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பெங்களூரு மத்திய தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நடிகர் பிரகாஷ்ராஜ் ஆற்றினார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, வாக்களிப்பது என்பது முக்கியமான விஷயம். ஏனெனில் நீங்கள் தேர்ந்தெடுக்க உள்ளவர்கள் தான் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள். இதனால் வாக்களிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று. வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கின்ற தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் தலைமுறை மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பது அவசியமான ஒன்று. நல்ல தலைவரை தேர்ந்தெடுங்கள் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, காலை 7 மணிக்கே இவ்வளவு பேரு வந்திருக்காங்க என்றால் ஏதோ ஒரு மாற்றம் கண்டிப்பா இருக்கு என்று நம்புகிறேன். ஒரு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள துடித்துக்கொண்டு வாக்களிக்க வருகிறார்கள். இன்று ஒரு நாள் வரிசையில் நிற்கவில்லை என்றால் வருடந்தோறும் வரிசையில் நிற்கிற நிலை வரும். நான் வெறுப்பு எதிராக வாக்களித்தேன் எனவும் தெரிவித்தார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…