கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு -மக்களவையில் மன்னிப்பு கேட்டார் பாஜக எம்.பி. பிரக்யா

Published by
Venu

பாஜகவின் எம்.பியான பிரக்யா சிங் தாகூர் சர்ச்சைக்கு பெயர்போனவர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறினார்.இவர் இவ்வாறு கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தான் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்களவையில் மீண்டும் கோட்சே  குறித்த கருத்தை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.திமுக எம்.பி. ஆ.ராசா  மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் குறித்த பேசுகையில்,32 ஆண்டுகளாக காந்தியின் மீது வஞ்சம் வைத்திருந்தேன் என்று காந்தியை கொன்ற கேட்சே தெரிவித்ததாக கூறினார் ராசா.இந்த வேளையில் தான் பாஜகவின் எம்.பியான  பிரக்யா சிங் தாகூர்  குறுக்கிட்டு பேசினார்.அவர் கோட்சே ஒரு தேசபக்தர் என்றும் கூறினார்.இதனால் அவையில் கூச்சல் நிலவியது.ஏற்கனவே அவர் கூறிய நிலையில் மீண்டும் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரக்யாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று கோட்சேவை தேச பக்தர் என கூறியது தொடர்பாக மக்களவையில் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங் தாக்கூர்.ஆனால் பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரக்யாவை அவையை விட்டு வெளியேறும்படி கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
 

Recent Posts

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

2 minutes ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

28 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

29 minutes ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

1 hour ago

இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…

2 hours ago

நாட்டிலேயே முதல் முறையாக எஸ்.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு., தெலுங்கானா அரசு புதிய அறிவிப்பு!

ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…

2 hours ago