Categories: இந்தியா

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்… டெல்லியில் பல்வேறு இடங்களில் அதிர்வு! அச்சத்தில் பொதுமக்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

நேபாளத்தில் இன்று பிறப்பார்கள் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது. அதன்படி, நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு இன்று டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லி மட்டுமின்றி வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், உத்தரகாண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு, அலுவலகங்களில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு 40 வினாடிகள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு பட்டேகோடா பகுதியை மையமாக கொண்டு 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, பிற்பகல் 2.51 மணிக்கு மீண்டும் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்த இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 minutes ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

28 minutes ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

1 hour ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

12 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago