Categories: இந்தியா

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்… டெல்லியில் பல்வேறு இடங்களில் அதிர்வு! அச்சத்தில் பொதுமக்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

நேபாளத்தில் இன்று பிறப்பார்கள் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது. அதன்படி, நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு இன்று டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லி மட்டுமின்றி வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், உத்தரகாண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு, அலுவலகங்களில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு 40 வினாடிகள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு பட்டேகோடா பகுதியை மையமாக கொண்டு 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, பிற்பகல் 2.51 மணிக்கு மீண்டும் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்த இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago