15 மணிநேர மின் தடைக்கு பின், நவி மும்பை மற்றும் தானே பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஜூகு, அந்தேரி, நவி மும்பை, பான்வெல், தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின்வாரிய நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர். மேலும், மின் தடை காரணமாக பாதி வழியிலே பல ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகளும் அவதிக்குள்ளாயினர். அதனைதொடர்ந்து போக்குவரத்துக்கு சிக்னல்களும், அடுக்குமாடி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள லிப்டுகளும் இயங்காத காரணத்தினால் மும்பை மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
மும்பையில் ஏற்பட்ட மின்தடை குறித்து மத்திய எரிசக்தி மற்றும் இணையமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்ததாவது, மின்சார விநியோகம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், தேசிய மின் விநியோக அமைப்பு நன்றாக உள்ளதாகவும், மாநில அமைப்பின் தான் சில கோளாறு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், மின் தடை ஏற்பட்ட 15 மணி நேரத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் நவி மும்பை மற்றும் தானே ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளுக்கு இன்னும் மின் வசதி கிடைக்கவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…