திருமண விழாவில் பவர் கட்… மாப்பிளையை மாற்றிய 2 சகோதிரிகள்!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்தியப் பிரதேசத்தில் திருமண செய்யும் நேரத்தில் பவர் கட் இருந்ததால் மாப்பிளையை மாற்றி மணமுடித்த சகோதிரிகள்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் தெஹ்சில் அஸ்லானா என்ற கிராமத்தில் ஒரே நாளில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் திருமணம், மின்சாரம் துண்டிப்பு (POWER CUT) காரணமாக தவறான மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் ரமேஷ்லா என்பாரின் இரண்டு மகள்கள், நிகிதா மற்றும் கரிஷ்மா வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களான டங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் மணப்பெண்கள் இருவரும் முகத்தை மறைத்து இருந்ததாலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்ததாலும், தவறான மாப்பிள்ளைகளை வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

திருமணம் சமயத்தில் பவர் கேட் என்பதால் இருட்டில், மணப்பெண்களை தவறான மாப்பிள்ளையுடன் திருமண விழாவை நடத்தி உள்ளனர். திருமண பண்டிதர் மாப்பிள்ளைகளை ‘மாற்றிய’ மணப்பெண்களுடன் சுற்றும்படி செய்துள்ளார். மணமகன்கள், மணமக்களை அந்தந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு தான் இதுவே தெரியவந்துள்ளது. சிறிது நேர பிரச்சனைக்கு பிறகு குடும்பங்கள் சமரசம் செய்து கொண்டதாக தகவல் கூறப்படுகிறது.

மணமக்கள் மற்றும் மணமகன்கள் மறுநாள் தங்கள் சரியான துணையுடன் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வினோதமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…

23 minutes ago

தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …

56 minutes ago

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…

1 hour ago

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

2 hours ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

2 hours ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

3 hours ago