பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பின்னர் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின்னர் 2020 -21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை 2வது அமர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் என அறிக்கையில் கணக்கிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குரல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்.1-ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…