பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பின்னர் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின்னர் 2020 -21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை 2வது அமர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் என அறிக்கையில் கணக்கிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குரல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்.1-ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…