கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1ம் தேதி வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…