நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி 8 வயதாகும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மில்லியன் கணக்கான மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, வரும் 13 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுகளை ஒத்திவைக்கமாறு தெரிவித்துள்ளார்.
நீட் மட்டுமின்றி, ஜே.இ.இ. மெயின், ஜே.இ.இ அட்வான்ஸ், மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக தேர்வுகள், சி.பி.எஸ்.இ கம்பார்ட்மென்டல் தேர்வுகள், என்.டி.ஏ, டியூட் மற்றும் பிற தேர்வுகளை தாமதமின்றி ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகளவில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, சுமார் 14 மாவட்டங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன், இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…