#LIVE: உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் – ஆணையர் சுஷில் சந்திரா..!

Default Image

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா,

  • தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரவை ஆயுட்காலம் மார்ச் 15 முதல் மே 14-க்குள் முடிவடைகிறது.
  • 5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள்
  • அவர்களில் 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்
  • ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு
  • வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் கொரோனா பரவாமல் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த முறை தேர்தல் நடைபெறும்
  • உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது.
  • 5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு
  • சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
  • தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகளை பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளிக்க முன்வரவேண்டும்.
  • இ- விஜில் என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும்.
  • வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.
  • வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்
  • ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம்.
  • தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • தேர்தல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப்படுகின்றன இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பதட்டம் நிறைந்த வாக்கு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.
  • தேர்தலை காரணம் காட்டி, மதுவோ அல்லது பணமோ அன்பளிப்பாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தலை தள்ளிவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
  • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர்கள் என்றவரை டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.
  • 5 மாநில தேர்தலில் வாக்களிக்க நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு.
  • ஜனவரி 15 வரை தேர்தல் தொடர்பான எந்த பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது.
  • நடைப்பயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றிற்கு ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
  • தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்