80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் – 234 தொகுதிகள் , புதுவை – 30 தொகுதிகள், கேரளம் – 140 தொகுதிகள், மேற்குவங்கம் – 294 தொகுதிகள் ,அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.66 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது, 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று கூறினார்.
மேலும், கொரோனா நோயாளிகள், கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் வாக்களிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக ஏப் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…