2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம்…! புகைப்படம் உள்ளே…!

Default Image

2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம்.

கேரளாவில் சுரேஷ் என்ற ஆர்ட்டிஸ்ட் ஒருவர், நகைக்கடையில் வைத்து, செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 2.5  கிலோ தங்க நகைகளை கொண்டு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை செய்துள்ளார். நாம் ஒரு படத்தை எவ்வளவு துல்லியமாக வரைவோமோ, அதுபோல தங்க நகைகளை கொண்டு  துல்லியமாக, மிகவும் அழகாக அப்துல்கலாமின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஓவியருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இதற்க்கு முன்பதாக ஆர்ட்டிஸ்ட் சுரேஷ், நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ், மோகன்லால் போன்ற நடிகர்களின் உருவப்படத்தையும் பேப்பர், மரத்துண்டுகள்,  பாத்திரங்கள், பூக்கள் மற்றும் புற்கள், காய்கறிகள் போன்ற பல விதங்மான பொருட்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். இதுவரை இவர் 60-க்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை இவ்வாறு உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்