உரிய ஆவணங்கள் இன்றி நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் போக்குவரத்து காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பிலான Porsche 911 என்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அகமதாபாத் போக்குவரத்து காவல்த்துறை துணை ஆணையர் அஜித் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உரிய ஆவணங்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் சுற்றிவந்த Porsche 911 என்ற சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.சம்பவ இடத்தில் இந்த காருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.இதனால் காரை போக்குவரத்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தோம்.அவர் மேற்கொண்ட ஆய்வில் ,காருக்கு இன்சூரன்ஸ் எதுவும் செய்யப்படவில்லை மற்றும் சாலை வரியும் கட்டவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.மேலும் இதன் உரிமையாளர் அபராதத் தொகை கட்டியதும் கார் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த காரின் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…