மைசூரு பல்கலைக்கழகத்தில் பயின்ற பாடங்களில் அதிக அளவு மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் தற்போது 101 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பட்டங்களை வழங்கியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் படித்த சைத்ரா நாராயண் என்ற மாணவி பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை அடைந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உத்தரகண்டா மாவட்டத்தில் உள்ள சிர்சி என்ற பகுதிக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சைத்ரா நாராயண். இவரது கிராமத்திற்கு மொத்தமாகவே இரண்டு பேருந்துகள் மட்டுமே வருகிறது. காலை ஒன்றும் மாலை ஒன்றும் வருகிறது. இந்த பேருந்தை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்த மாணவி மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் இவர் அந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை வேதியியல் பட்ட படிப்பை படித்தார். பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றதன் காரணத்தால் இந்த மாணவிக்கு 20 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையால் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…