திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று வயதான வெள்ளை நிறம் கொண்ட பொமேரியன் நாய் ஒன்று சாலையில் இங்கும் அங்கும் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.இதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த பொமேரியன் நாயை மீட்டார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஓன்று காத்து இருந்தது.அந்த நாயின் கழுத்தில் ஒரு தூண்டு தாளில் ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது.அந்த தாளில் “இந்த நாய் நன்றாக பழகும் , அதிக உணவு சாப்பிடும் அதிகமாக பால், பிஸ்கட், முட்டை போன்றவர்களை விரும்பி சாப்பிடும்.
ஐந்து நாளைக்கு ஒருமுறை குளிக்கும். இந்த நாயிடம் எந்த விதமான நோயும் இல்லை. இதுவரை இந்த நாய் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் இதை அனாதையாக விடப்படுகிறது” என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் கூறுகையில் ,பொதுவாக நாய் அடிபட்டு இருந்தாலோ , நோய் இருந்தாலோ அந்த நாயின் உரிமையாளர்கள் அனாதையாக விட்டு விடுவார்கள்.ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக வைத்து நாயை அனாதையாக விடப்பட்டது இதுவே முதல் முறை என கூறினார்.
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…