கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாக கூறி அனாதையாக விடப்பட்ட பொமேரியன் நாய்!

Default Image

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று  வயதான வெள்ளை நிறம் கொண்ட பொமேரியன் நாய் ஒன்று சாலையில் இங்கும் அங்கும் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.இதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த பொமேரியன் நாயை மீட்டார்.

அப்போது  அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஓன்று காத்து இருந்தது.அந்த நாயின் கழுத்தில் ஒரு தூண்டு தாளில் ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது.அந்த தாளில் “இந்த நாய் நன்றாக பழகும் , அதிக உணவு சாப்பிடும் அதிகமாக பால், பிஸ்கட், முட்டை  போன்றவர்களை விரும்பி சாப்பிடும்.

ஐந்து நாளைக்கு ஒருமுறை குளிக்கும். இந்த நாயிடம் எந்த விதமான நோயும் இல்லை. இதுவரை இந்த நாய் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் இதை அனாதையாக விடப்படுகிறது” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் கூறுகையில் ,பொதுவாக நாய் அடிபட்டு இருந்தாலோ , நோய் இருந்தாலோ அந்த நாயின் உரிமையாளர்கள் அனாதையாக விட்டு விடுவார்கள்.ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக வைத்து நாயை அனாதையாக விடப்பட்டது இதுவே முதல் முறை என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
adhik ravichandran
dhoni Riyan Parag
Myanmar Earthquake
pm modi MK stalin
CSKvsRR