சர்வதேச பிரட்சனைகளை இந்தியா ஒன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு…

Published by
Kaliraj
  • தலைநகர் டெல்லியில் நடைபெற்ற, பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் அதிரடியான பல கருத்துக்களை முன்வைத்தார்.
  • இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிய அமைச்சர் ஜெய்சங்கர்.

அவர் இவ்விழாவில்  பேசியதாவது,   இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்து, அதற்கேற்ப தன் முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை  தள்ளி நின்று என்றுமே வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண முற்படும் என்றார். மேலும் கூறிய அவர்,  எந்த ஒரு பிரச்னையிலும், இந்தியா  தன் முடிவை,  உறுதியாக தெரிவிக்கும். இதற்கு, உதாரணமாக பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை கூறலாம் என்றார்.மேலும் கூறிய அவர்,  இந்தியா-சீனா இவற்றிற்க்கு இடையேயான நல்லுறவில், இரு நாடுகளும் பரஸ்பரம் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பில்லை. இரு நாடுகளின்  உறவு என்பது மிகவும் தனித்துவமானது. அதுபோல, உலகின் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டும். இரு நாடுகளின் உறவில், ஏற்ற, இறக்கமற்ற நிலை அமைய வேண்டும். இதே போல் இந்தியா- அமெரிக்கா நாடுகள், இணைந்து செயல்படாத துறையே இல்லை எனலாம். உலக நாடுகளுக்கு, பொதுவான சவால்கள் பல உள்ளன.அவற்றுள், பயங்கரவாதம், பிரிவினை, குடிபெயர்வு உள்ளிட்டவற்றை கூறலாம். இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை, உலக நாடுகள், தங்களுக்குள் கருத்துக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த அதிரடியான கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

31 minutes ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

8 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

10 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago