அடுத்தடுத்து பறக்கும் ராஜினாமா கடிதங்கள்.என்ன நடக்கிறது ம.பி! காங்..,ஆட்சிக்கு சிக்கலா!??

Published by
kavitha

மத்தியப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியின்ன் ஆட்சிக்கு கடும் நெடுக்கடி நிலவி வரும் நிலையில் காங்.,எம்எல்ஏ ஒருவா் ராஜிநாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு அரசியல் நெடுக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது பகீரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் சிலரை பணம் கொடுத்து தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு  எழுந்து உள்ளது. ஆனால் ஒருமித்த இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்து உள்ளது.

 மொத்தம் 230 உறுப்பினா்களைக் கொண்ட அம்மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ்க்கு 114 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும் தற்போது உள்ளனா். ஆனால் இருக்கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.அப்படி பெரும்மாண்மைக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு ஒரு கட்சிக்கு தேவை என்ற நிலையில் 4 சுயேச்சைகள் அதாவது பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 2 பேர் சமாஜவாதி உறுப்பினா் ஒருவரின் ஆதரவோடு காங்.,தலைமையில் கமல்நாத் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டு ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

காரணம் சமீபத்தில் தான் பாஜக மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த தலா ஒருவா் என இரு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் 2 இடங்கள் தற்போது காலியாக உள்ளது.இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ ஹா்தீப் சிங் தாங் ராஜிநாமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அவருடைய  ராஜிநாமா கடிதம் சமூகவலைதளங்களில்  வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில் ராஜினாமா செய்ததாக கூறப்படும் ஹா்தீப் சிங் உள்பட 4 எம்எல்ஏக்களை பாஜகவினா் பெங்களூருக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை பாஜக மறுத்துவிட்டது.

இவ்வாறு ம.பி அரசியலில் எதிர்பார்க்காத வகையில்  குழப்பம் நிலவி வரும் நிலையில் அம்மாநில முதல்வரிடமே இது தொடர்பாக கேட்டப்பட்ட போது அவர் ஹா்தீப் சிங் எம்எல்ஏ பதவியை  ராஜிநாமா செய்துவிட்டதாக எல்லோரையும் போல் எனக்கும் தகவல் கிடைத்தது. ஆனால் முறைப்படி எந்த கடிதமும் எனக்கு வரவில்லை .அவரும் இது தொடா்பாக என்னிடம் பேசவில்லை. என்று கூறிய கமல்  இந்த விவகாரத்தில்  இதற்கு மேல் வேறு எதுவும் கூற முடியாது என்று கூறி நழுவி சென்றதன் மூலமாகவே மத்தியபிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவுவதை அறிந்து கொள்ளமுடிகிறது என்கிறனர் அரசியல் நோக்கர்கள் அதே போல் அம்மாநில சட்டப் பேரவைத் தலைவா் என்.பி. பிரஜாபதியும் ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் அது குறித்தும் கடிதம் எதுவும் தன்னிடம் வரவில்லை என்று கமல்நாத் கூறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago