அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இயலாமையை ஒப்புக் கொள்ளும் குணம் ரத்தத்திலேயே கிடையாது – டெல்லி உயர்நீதிமன்றம்!

Published by
Rebekal

அரசியல்வாதிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தோல்வி மற்றும் இயலாமையை ஒப்புக் கொள்ளும் குணம் இரத்தத்திலேயே கிடையாது என டெல்லி உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி அரசு டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அலுவலர்கள் ஆகியோருக்கு சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவோம் என வாக்குறுதி கொடுத்து இருந்தது. ஆனால் இதுவரை 852 க்கும் மேற்பட்ட நீதிமன்ற அலுவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர்களுக்கு கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் அளிக்கப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாநில நீதித்துறை சேவைகள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வெளியிட்டுள்ள உத்தரவில் அரசியல் சாசனப்படி பதவி வகிக்க கூடிய உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சில அரசு வழிகாட்டுதல் உள்ளது.

ஆனால் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதுபோல கிடையாது. கொரோனா காலத்திலும் நேரடியாக தான் அவர்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது. எனவே தங்கள் மகன் அல்லது குடும்பத்தார் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்பொழுது அவர்கள் எப்படி நிம்மதியாக பணியாற்ற முடியும். ஏற்கனவே மூன்று நீதிபதிகள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கீழ் நீதிமன்றங்களை சேர்ந்த நீதிபதிகளுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாக தான் செல்லும்.

எனவே கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு டெல்லி அரசு கொடுத்த மருத்துவ வசதிகள் திருப்தி அளிப்பதாக இல்லை எனவும், உத்தரவு அரசியல்வாதிகளுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தங்கள் தோல்வி மற்றும் இயலாமையை ஒப்புக் கொள்ளும் மனோபாவம் ரத்தத்திலேயே கிடையாது எனவும் கடுமையாக சாடியுள்ளனர். மேலும், நீதிபதிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பான குறைகளுக்கு டெல்லி அரசு தீர்வு காண வேண்டும் எனவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago