Categories: இந்தியா

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனும்… I.N.D.I.A அரசியல் தலைவர்களின் வரவேற்பும்…

Published by
மணிகண்டன்

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு வரவேற்பு தெரிவித்து I.N.D.I.A கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் , ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களும் நேற்று முதல் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

திமுக :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது என பதிவிட்டு இருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் :

அதே போல, I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன், நீதியை அடையாளப்படுத்துகிறது. மேலும், நமது I.N.D.I.A கூட்டமைப்பை பலப்படுத்துகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை அதிகப்படுத்துகிறது என குறிப்பிட்டார் மம்தா.

தேசியவாத காங்கிரஸ் :

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உத்தரவை நான் வரவேற்கிறேன். ஜனநாயகத்தை காப்பதில் I.N.D.I.A கூட்டணி உறுதியாக உள்ளது என்று பதிவிட்டார்.

சமாஜ்வாடி :

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்பதிவிடுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உண்மைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும். I.N.D.I.A  கூட்டணியின் வலிமையும் ஒற்றுமையும் பாஜகவின் ஆட்சியில் இருந்து இந்திய மக்களை விடுவிக்கப் போகிறது. மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா :

I.N.D.I.A கூட்டணையில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில்,  அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடு இயங்கிறது என்பதை சர்வாதிகார சக்திகளுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டு இருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

5 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

6 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

7 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

8 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

8 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

10 hours ago