டெல்லி:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், கல்வி மற்றும் நிர்வாகங்களை சமமாக எளிதாக்கிய அரிய அரசியல்வாதிகளில் ஒருவர். பொது அலுவலகங்களில் அவரது பல்வேறு பாத்திரங்களில், இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார்.
தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை, களங்கமற்ற அரசியல் வாழ்வு, மிகுந்த பணிவு ஆகியவற்றிற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. தாழ்மையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். துக்கத்தின் இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,”மன்மோகன் சிங் ஜி, இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. திருமதி கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு வழிகாட்டி மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது. பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டவர் என மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையாக இருக்க மன்மோகன் செயல்பாடுகள் துணைபுரிந்ததாக புகழாரம் சூட்டினார்.
unknown nodeஉதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார் என்கிற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.10 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் இருந்து நிறைய சாதித்த நிறைகுடம். மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பெற்றத் திட்டங்களும், அடைந்த வளர்ச்சியும் அதிகம். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாசத்துக்கும், மதிப்புக்கும் உரியவர். உலக பொருளாதாரத்தின் திசைவழியை சரியாகப் புரிந்துகொண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்த மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeபழனிசாமி
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,”இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் (1982-1985) மற்றும் மத்திய நிதி அமைச்சர் (1991-1996), அவரது பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. அவரது குடும்பத்தினருக்கும், நிர்வாகிகளுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில்,” மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து துயரமும், மன வேதனையும் அடைந்தேன். பொருளாதார நிபுணராக தனது பணியை தொடங்கிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeவிஜய்
த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeதிருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகப் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநரும் மேனாள் இந்திய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தியாவின் பிரதமராக இருந்ததோடு இந் நாட்டின் பெருமைமிகுக் குடிமகனாகவும் அவர் போற்றப்பட்டார். பொது வாழ்வில் கண்ணியத்தையும், களங்கப்படுத்த முடியாத நேர்மையையும் கொண்டு, அனைத்துத் தரப்பினரது நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். அவரது மறைவுக்கு விசிக சார்பில் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node