கொல்கத்தாவில் நடந்த பேருந்து விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவில் பிற்பகல் 12.30 மணியளவில் வில்லியம்கோட்டை அருகில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து ஹௌராவிலிருந்து மெட்டியாரூப்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வில்லியம்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து, நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் மீது இடித்து தள்ளிக்கொண்டு வில்லியம் கோட்டை சுவற்றில் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் கொல்கத்தா காவல் ரிசர்வ் படையை சேர்ந்த விவேகானந்த் தாப். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் சௌமென் மித்ரா நேரடியாக விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…