சபரிமலையில் மகரவிளக்கு பூஜை……பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
சபரிமலையில் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நாளை மாலை 6.35 மணிக்கு தொடங்குகின்றது. மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை காண பல்வேறு பகுதிகளைச் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அதே நேரம் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நவீன கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.