டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் வீடியோ வெளியிட்டிருப்பது காவல் பணிவிதிகளை மீறிய செயல் என்பதால் இருவருக்கும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறை அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‘இருவரும் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளீர்கள். காவல் நிலையத்தில் பணி செய்யும் வேளையில் இருவரும் செய்த செயல் உங்களது பணியில் ஒழுங்கீனமாக கருதப்படுகிறது. கடமைகளை அலட்சியம் செய்துள்ளீர்கள். இது குறித்து நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…