மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை அமலாக்கத்துறை முடிவு செய்தது.
அதன்படி, கடந்த நவம்பர் 2ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து, 2 வது முறையாக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் ஆஜராக முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், 3-வது முறையாக நேற்று அமலாக்கத்துறை மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஆதிஷி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நேற்று கூறிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…