ரயிலில் தப்பிச்சென்ற திருடனை பிடிக்க விமானத்தில் பறந்த போலீசார்.!

Published by
murugan

மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரைச் சேர்ந்த கைலாஷ் தாஸ், இவர் பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் பில்டர் ராஜேஷ் பாபுவின் வீட்டில் ஆறு ஆண்டுகள் வேலை செய்து, அங்கு அடித்தளத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பாபுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்டோபர் 9-ஆம் தேதி, பாபுவின்  குடும்பதினர் கொரோனா நோயாளியை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, தாஸ் ரூ .1.3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருடி கொண்டு மைசூருவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவித்தனர்.

மைசூருவில் உள்ள ஒரு லாட்ஜில் சில நாட்கள் தங்கியிருந்த தாஸ், பின்னர் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்து மீண்டும் பெங்களூருக்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர்  ஹவுராவுக்கு ரயிலில் ஏறினார் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை  ஆய்வு செய்தனர். அப்போது, யாஸ்வந்த்பூரில் தாஸ் ரயிலில் ஏறுவதை அவர்கள் கவனித்தனர். பின்னர், ரயில் ஹவுரா ரயில் நிலையத்தை அடைவதற்குள் தாஸைக் கைது செய்வதற்காக கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் பறக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஹவுரா ரயில் நிலையத்தில் காவல்துறையினரைக் கவனித்த தாஸ் தப்பிக்க முயன்றார். ஆனால், தாஸை போலீசார் கைது செய்து பாதுகாப்பாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டார் என்று அதிகாரி கூறினார்.

Published by
murugan

Recent Posts

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

2 minutes ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

15 minutes ago

வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!

சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…

51 minutes ago

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

13 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

13 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

14 hours ago