எம்.பி.க்களுடனான பிரதமர் சந்திப்பு ஒத்திவைப்பு..!

Published by
murugan

மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நாளை மறுநாள் ஒத்திவைப்பு

மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருந்த சந்திப்பு தற்போது நாளை மறுநாள் (மார்ச் 31ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக நாளை நடைபெற இருந்தது. பிர்பும் வன்முறைக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

வன்முறைக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பிர்பூம் வன்முறை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய பாஜக  மாநிலத்தில் ஜனநாயகம் “கொலை செய்யப்படுவதாக” குற்றம் சாட்டியது. மேலும்,  மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் கொல்லப்பட்டார். பகது ஷேக்கை அதே பகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியானதை அடுத்து ஆத்திரமடைந்த ஷேக் ஆதரவாளர்கள் சோனா ஷேக்கின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan
Tags: #MP#PMModi

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

24 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago