உலகின் மிக நீளமான 9 கி.மீ குகைவழிப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர்!

Default Image

உலகின் மிக நீளமான 9 கி.மீ குகைவழிப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

பனிக்காலத்தில் கடுமையாக ஏற்படக்கூடிய பணி சரிவால் இமாசலப் பிரதேசத்திலுள்ள மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு வரைக்கும் பனியால் மூடப்பட்டு காணப்படும். இதனால் ஆறுமாதங்களுக்கு அப்பகுதியில் யாரும் போக்குவரத்து வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வாஜ்பாய் அரசு முடிவில் கட்டத் தொடங்கப்பட்ட ரேத்தங் சுரங்கப்பாதை வாஜ்பாய் நினைவாக அடல் சுரங்கப்பாதை என கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி அவர்களால் முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ள நிலையில், உலகிலேயே மிக நீளமான 9.2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த அடல் சுரங்கப்பாதையை எந்த ஒரு பனி, மழை, வெயில் காலங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை இன்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிப்பதால் மணாலி – லே இடையிலான தூரம் 46 கிலோமீட்டர் குறையும் எனவும், பயண நேரம் 5 மணி நேரம் குறையும் எனவும், இது கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court