பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரை

Published by
Venu

பிரதமர் நரேந்திர மோடி இன்று  நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 75-ஆண்டு பொதுச் சபையில் (யுஎன்ஜிஏ) உரையாற்றவுள்ளார்.

கடந்த 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. ஐ.நா.வின் முக்கிய நோக்கம் உலக நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஆகும்.

இந்த கூட்டம் நியூயார்க்கில் நடைபெறுகிறது.கொரோனா காரணமாக  தலைவர்கள் பங்கேற்க முடியாத நிலையில் இந்த கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. அதாவது உறுப்பு நாடுகளின் தலைவர்களின்  உரையை  முன்கூட்டியே  வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.இந்த  வீடியோ கூட்டத்தில் ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் தலைவர்களின் வீடியோக்களும் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது ஐக்கிய நாடுகள் சபை.

 இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் அவர் எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்றும்  பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதன் மூலம்  கொரோனா நோய்க்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.

Published by
Venu
Tags: #PMModiUNGA

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago