உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே விவசாயிகள் 90 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராடி வரும் விவசாயிகளில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.போராடி வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் குறைக்கப்பட்டது, அவர்கள் தாக்கப்பட்டனர்.அவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் டெல்லியின் எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாற்றப்பட்டன.எங்கள் எல்லைகளை பாதுகாக்க தங்கள் மகன்களை அனுப்பும் விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.”பிரதமர் விவசாயிகளை கேலி செய்தார், அவர்களை ‘ஆண்டோலன் ஜிவி’ என்று அழைத்தார். விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிக்கைட் அழும்போது, அது வேடிக்கையானது என்று பிரதமர் கருதுகிறார்” எனக் கூறினார் பிரியங்கா.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…