பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.
கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவித்து உள்ள நிதியுதவியில் அடங்கும். கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,உங்கள் அனைவருக்கும், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் விரைவில் உங்கள் சொந்த வீடு, கனவு இல்லத்தைப் பெறப் போகிறீர்கள்.இன்று 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றுள்ளன.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் கட்டணத்தையும், 80,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீட்டிற்கான இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர் என்று பேசியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…