நாளை சென்னையில் 4 மணிநேரம் மட்டும் இருக்கப்போகும் பிரதமர் மோடி!

Default Image

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி. இவருக்கு நேற்று டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடி கல்லூரியில் நடைபெறும் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் அளிக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து கிண்டிக்கு காலை 9 மணியளவில் வர உள்ளார்.

மேலும், அங்கு நடைபெற உள்ள இந்தியா சிங்கப்பூர் ஹேகத்தான் 2019 என்ற கண்காட்சியை காண்பதற்காக வருகிறார். இதில், புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

அதன் பிறகு  11 மணியளவில் ஐஐடி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மதியம் 12.45க்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்  பிரதமர் மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn