#BREAKING: பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்றிரவு அஞ்சலி..!

Default Image

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.  இதைத்தொடர்ந்து, இன்று காலை வெலிங்டனில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இராணுவ சிறப்பு விமானம் மூலம் உடல்கள் டெல்லி சென்றது. 13 பேரின் உடல்களையும் ஏற்றிக்கொண்டு விமானப்படை விமானம் இரவு 7.40 மணியளவில் டெல்லியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகளின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan