பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14ஆம் தேதி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கும் மோடி, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றவும் உள்ளார். இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பில் மேலும் வெளியிட்டுள்ள தகவலில், “ துபாயில் நடைபெறவுள்ள உலக அரசு உச்சி மாநாடு 2024ல் பிரதமர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.
மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!
அபுதாபியில் உள்ள முதல் இந்து கோவிலான BAPS மந்திரை திறந்து வைத்து, சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, இந்தியா-அமீரகம் இடையிலான கலாசாரங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…