பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் காணொளி காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இன்று காணொளிக் காட்சி வழியாக முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா உயர்மட்ட அளவிலான நட்புறவை கொண்டுள்ளதாகவும், உயர்மட்ட அளவிலான முக்கிய விஷயங்களை சீராக பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறைகளில் அவை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாக்கம் அடையவும் வலுப்படவும் ஏற்ற வழியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கை 2030 ல் வெளியிடப்படும் எனவும், இதில் மக்கள் ஒருவருக்கொரவர் தொடர்புபடுத்திக் கொள்ளுதல் வர்த்தக மற்றும் வளம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதாரம் ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…