Categories: இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து… சோனியா காந்திக்கு உதவியதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நெருக்கடியான நிலையில் இருக்கும்போது உதவியதை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

பிரபல ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி கூறியதாவது, நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, டாமன் நகரில் சோனியா காந்தி மற்றும் அகமது படேல் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது நான் அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு ஏர் ஆம்புலன்ஸை அனுப்புகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.

ஆனால் அனைவரும் நலமாக இருப்பதாகவும், எந்த வித அவசர நிலையும் தற்போது இல்லை எனவும் அகமது படேல் என்னிடம் கூறினார். இதேபோல் ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக சோனியா காந்தி காசிக்கு சென்றபோது அவருக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டது.

அப்போது உடனடியாக சோனியா காந்தியை பார்க்கவும், என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் காசிக்கு எனது அதிகாரிகளை அனுப்புனேன். தேவைப்பட்டால் சோனியா காந்திய அழைத்து செல்ல தனி விமானத்தையும் அனுப்ப தயாராக இருந்தேன். இதுதான் நான், இது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

என்னைப் பொறுத்தவரை, யாருக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அதை தீர்க்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என பிரதமர் கூறியுள்ளார். இதுபோன்று, தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் சில சிக்கல் ஏற்பட்டதை கேள்விப்பட்டவுடன் அவரை தொடர்புகொண்டு என்ன நிலை என்று கேட்டறிந்தேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

42 minutes ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

2 hours ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

3 hours ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

3 hours ago