பாஜக வெற்றி விழா.! அயராத உழைப்பு – ஜேபி நட்டா… எங்கள் அதிர்ஷ்டம் பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த பாஜக இந்த முறை தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 மாநில தேர்தல் வெற்றியை பாராட்டும் விதமாக, நேற்று டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டார். அதில் பேசிய பிரதமர் மோடி , தேசிய தலைவர் ஜேபி.நட்டாவை வெகுவாக பாராட்டினார்.

தெலுங்கானா தேர்தல் ஹைலைட்ஸ்… ஆட்சி கோரும் காங்கிரஸ்.! முன்னேறிய பாஜக.!

அவர் கூறுகையில், நீதி துறையிலும்,  அமைச்சராக பொறுப்பில் இருந்த போதும்ம், ஜேபி.நட்டா சிறப்பாக பங்காற்றி வந்தார். அதே போல ஒரு கட்சி தலைவராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.  தேர்தலுக்கு முன்பாக அவரது குடும்பத்தில் ஒரு துயரம் நிகழ்ந்தது. ஆனால் அதனை கூட பொருட்படுத்தாமல், அவர் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டார்.

இந்த வெற்றிகள் நமது தேசியத் தலைவர் நட்டா-ஜியின் அயராத உழைப்பால் கிடைத்தவை. அவர் நடைமுறைப்படுத்திய உத்திகள்தான் இன்றுவரை நம்மை வழிநடத்திச் சென்றுள்ளது. கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் செயல்பட்டு வருகிறார். இனியும் இந்த பணியை சிறப்பாக செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

இதனை அடுத்து பேசிய தேசிய தலைவர் ஜேபி.நட்டா, நாட்டில் தற்போது செயல்படுத்தப்படும் ஒரே உத்தரவாதம் என்றால் அது பிரதமர் மோடியின் உத்தரவாதம் மட்டுமே. பிரதமர் நரேந்திர மோடிஜியின் தலைமையில் நாங்கள் சரிவுகளில் இருந்த காலத்திலும், பல வெற்றிகளைப் பெற்ருள்ளோம். பிரதமர் மோடியை எங்களது அதிர்ஷ்டமாக கருதுகிறோம்.

மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு அவருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம், பிரதமர் மோடி எப்போதும் முன்னணியில் வந்து எங்களை வழிநடத்தினார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவது என எதுவாக இருந்தாலும், பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. மோடி எதையும் சாத்தியமாக்குவார் என மக்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago