எதிர்கால திட்டம்: குழாய்வழி கேஸ் விநியோகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!

Default Image

ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடி செலவில் குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 450 கி.மீ தூரமுள்ள இந்த குழாயை கெயில் (இந்தியா) லிமிடெட் உருவாக்கியுள்ளது. இது ஒரு நாளைக்கு 12 மில்லியன் மெட்ரிக் தரமான கன மீட்டர் போக்குவரத்து திறன் கொண்டது. கொச்சியில் உள்ள திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மறுசீரமைப்பு முனையத்திலிருந்து, மங்களூரு வரை இயற்கை எரிவாயுவை கொண்டு செல்கிறது.

இந்த குழாய்வழி கேஸ் விநியோகம் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் வழியே செல்கிறது.  தொடக்க விழாவில் கர்நாடகா மற்றும் கேரளாவின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.3,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குழாய் வழியாக மாவட்டங்கள் முழுவதும் வணிக மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும். தூய்மையான எரிபொருளை உட்கொள்வது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்