சென்னை: கடவுளின் வேலையை செய்ய என்னை அவர் பூமிக்கு அனுப்பியுள்ளார் என பிரதமர் மோடி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. மொத்தமுள்ள 7 கட்ட தேர்தலில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதம் 2 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேரடி மேடை பிரச்சாரத்துடன் தொலைக்காட்சி நேர்காணல் மூலமும் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி (News18) ஒன்றில் பேட்டியளித்த பிரதமர் மோடி தனது பிறப்பு பற்றி பேசியுள்ளார். அதில், நான் எல்லா மனிதர்களை போலவும் சாதாரணமாக (உயிரியல் ரீதியாக) பிறக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு பணியை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்பட்டுள்ளேன் என்றும் , கடவுள் அவருடைய வேலையை செய்வதற்காக தன்னை இந்த பூமிக்கு அனுப்பி என் மூலம் அந்த செயல்களை செய்கிறார். அதனால் நான் இந்த ஆற்றலை பெற்றுள்ளேன் என்றும் பிரதமர் மோடி அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
என் தயார் உயிரோடு இருக்கும் வரையில், நான் என் தாய் மூலம் தான் வந்துள்ளேன் என தெரிவித்து இருந்தேன். ஆனால் அவரின் இறப்புக்கு பிறகு நான் பல விஷயங்களை சிந்தித்து பார்த்தேன். சிலர் நான் கூறியதற்கு எதிராக பேசலாம். ஆனால் நான் இதனை முழு மனதாக நம்புகிறேன் என பிரதமர் மோடி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…