பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும், பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பலநோக்கு விதை களஞ்சிய சாலை, 100 மெட்ரிக் டன் விவசாய உற்பத்தி கிடங்கு, வீட்டு வளாகம் மற்றும் சாம்பர்ணானந்த் ஸ்டேடியத்தில் உள்ள வீரர்களுக்காக, வாரணாசி நகர ஸ்மார்ட் லைட்டிங் பணிகள் மற்றும் 105 அங்கன்வாடி கேந்திரங்கள் போன்ற பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்க்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்பு, பிஏசி போலீஸ் படையினருக்கான தடுப்பணைகள், காசியின் சில வார்டுகளில் மறுவடிவமைப்பு, பார்க்கிங் வசதி மற்றும் பெனியா பாக் நகரில் உள்ள ஒரு பூங்காவின் மறுவடிவமைப்பு, பி.எம்.கிரிஜா தேவி சம்ஸ்கிருத சங்கூலில் பல்நோக்கு மண்டபம், நகரத்தில் சாலைகள் பழுதுபாப்பு மற்றும் சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல் போன்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…