அம்ருத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 2000 ரயில் நிலையங்களை மத்திய அரசு புதுப்பித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகளை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
தற்போது அதே போல இந்தாண்டு 2ஆம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை புனரமைக்க இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பணிக்காக மட்டும் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 1500 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. என மொத்தமாக இன்று 21,520 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இன்று 2ஆம் கட்டமாக அம்ருத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையங்களில், தமிழகத்தில் இருந்து 34 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. சென்னை மண்டலத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் மண்டலத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சியில் 4 ரயில் நிலையங்கள், மதுரை மண்டலத்தில் 13 ரயில் நிலையங்கள், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்கள் என மொத்தம் 34 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளது.
மேலும் , உத்திர பிரதேசத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோமதி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்துவ வருகிறார். நாளை பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…