ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் ஜெயின் ANI பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சந்திரபாபு நாயுடு நேற்றே அவரது முழு ஆதரவையும் என்.டி.ஏ-வுக்கு தெரிவித்திருந்தார். இந்திய கூட்டணி எதை வேண்டுமென்றாலும் கூறலாம். ஆனால், நாங்கள் என்.டி.ஏ-வுடன் தான் இருக்கிறோம்.
மேலும், வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் சந்திரபாபு பதிவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் மற்ற தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளோம்”, என கூறினார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…