ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் ஜெயின் ANI பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சந்திரபாபு நாயுடு நேற்றே அவரது முழு ஆதரவையும் என்.டி.ஏ-வுக்கு தெரிவித்திருந்தார். இந்திய கூட்டணி எதை வேண்டுமென்றாலும் கூறலாம். ஆனால், நாங்கள் என்.டி.ஏ-வுடன் தான் இருக்கிறோம்.
மேலும், வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் சந்திரபாபு பதிவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் மற்ற தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளோம்”, என கூறினார்.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…