மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை.! ராகுல்காந்தி பேச்சு.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை,” இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி துவங்கிய இந்த யாத்திரை தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.!

இந்த விழாவில் ராகுல்காந்தி பேசுகையில்,  நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன், முதல்முறையாக இந்தியாவில் ஒட்டுமொத்த நிர்வாக கட்டமைப்பும் சரிந்த இடத்திற்கு (மணிப்பூர்) வந்துள்ளேன். கடந்த வருடம் ஜூன் 29க்கு பிறகு மணிப்பூர் மாநிலம் மணிப்பூர் போலவே இல்லை. எங்கும் பிளவுபட்டு எங்கும் வெறுப்பு பரவியது.

லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்ட்டனர். இங்குள்ள மக்கள் தங்கள் கண்ணெதிரே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். இதுவரை உங்கள் கண்ணீரைத் துடைத்து கையை பிடிக்க இந்திய பிரதமர் மோடி இங்கு வரவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்.  பிரதமர் மோடி, ஆளும்  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவில்லை என்று நினைக்கிறன்.

தற்போது நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை நிலை அதிகமாக நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளளது என ஆளும் பாஜக அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை ராகுல்காந்தி முன்வைத்து பேசினார். இந்த துவக்க விழா முடிந்த பிறகு மாலையில் ராகுல்காந்தி தனது ஒற்றுமை யாத்திரை நியாய நடைப்பயணத்தை துவங்க உள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

36 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

45 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

54 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

1 hour ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago