#BREAKING: நாளை மாநில முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற  பல புகார்கள் எழுந்து வருகிறது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் நாளை காலை 9 மணிக்கு அவசர ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி,  மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக முதல்வரும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆக்சிஜன்  உற்பத்தியாளர்களுடன் 12:30 மணிக்கு பிரதமர் மோடி காணொளியில் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்