நாட்டில் கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி இயக்கம் தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைமையை சரி செய்ய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதிலிருந்து 37,681 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் 26,200 புதிய வழக்குகளும் 114 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் மூலமாக இதுவரை 72.37 கோடி தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு இன்றுவரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…