Categories: இந்தியா

காங்கிரஸ் அந்த சமூகத்தினரை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது.! பிரதமர் மோடி குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரவுள்ளது. தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான ஆளும் கட்சி பாஜக , எதிர்க்கட்சி காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், ஜபுவா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி எப்போதும் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தை  வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், பாஜக பட்டியலின, பழங்குடியினர் சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தோல்வி… இனி அதிர்ஷ்டம் தான் கைகொடுக்கணும்.! பிரதமர் மோடி பேச்சு.!

இரட்டை இயந்திர அரசு (பாஜக) பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கையை மாற்ற பாடுபட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் கூட பழங்குடியின சமூகம் காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. காங்கிரஸுக்கு எதிரான கோபத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் எப்போதும் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த மகளை (குடியரசு தலைவர் திரௌபதி முர்மு) நாட்டின் உயரிய பதவியில் அமர வைத்துள்ளோம். பழங்குடியின கலாச்சாரத்திற்கு பாஜக என்றும் மரியாதை அளிக்கிறது. இதற்காக பழங்குடியின மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு நினைவிடங்களை பாஜக கட்டி வருகிறது. பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளை பழங்குடியினரின் பெருமை தினமாக நாடு முழுவதும் கொண்டாட வேண்டும். கொரோனா காலத்தில் கூட பாஜக மக்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று விட்டுவிடவில்லை என்றும் பிரதமர் மோடி மத்திய பிரதேச பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

11 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

32 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

36 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

50 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago