Categories: இந்தியா

இந்தியாவில் ஒலிம்பிக் எப்போது? செங்கோட்டையில் பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு.!

Published by
கெளதம்

டெல்லி : இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது உரையில், ” 75,000 புதிய மருத்துவ படிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் செக்யூலர் சிபில் கோட், பங்களாதேஷ் இந்துக்கள் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சமீபத்தில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி தனது உரையில் பாராட்டினார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது உரையில், “ இன்று, ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப் படுத்திய இளைஞர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக, நமது அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நான் வாழ்த்துகிறேன். அடுத்த சில நாட்களில், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய அணியினர் பாரிஸ் புறப்பட உள்ளனர்.

எங்கள் அனைத்து பாராலிம்பியன்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 மாநாட்டை நடத்தியதன் மூலம் பெரிய நிகழ்வுகளை இந்தியாவால் நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாகவும், இந்தியாவின் அடுத்த கனவு 2036 ஒலிம்பிக்ஸ் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதவாது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு என்றும், அதற்கான ஏற்பாடுகளை தனது அரசாங்கம் செய்து வருவதாகவும் “அவர் கூறினார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றதுடன் 64வது இடத்தையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago